வியாழன், 11 நவம்பர், 2010

தமிழிசை வளம் - 2

தமிழிசை வளம் - 2

பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டவை.

1. சுவரம்:

‘சுவரம்’ எனும் சொல்லுக்குத் தமிழ் நிகண்டில் ‡ கோல், தந்திரி, நரம்பு, தந்தி, கோவை, கேள்வி எனப் பல சொற்கள் வழக்கில் இருந்தன என்று அறிகிறோம். இவற்றுளே ‘சுவரம்’ என்பதற்குக் ‘கோவை’ ‡ எனும் சொல் பெரிதும் ஏற்றது.சுவரங்கள் ஒன்றேடொன்று கோக்கப்படுவதாலும் ஒன்றோடொன்று ஒலி அலகினால் கோப்பு நிலை அடைவதனாலும் ‘கோவை’ எனும் பெயரே மிகச் சிறப்புடையது.
ஒவ்வொரு கோவையும் முதற்கோவையாகிய குரலுடன் ஓரளவு ஒலிஅமைப்பில் கோக்கப்படுவதாலும் கோவை எனும் பெயர் மிகவும் ஏற்றது.
நரம்பு எனும் பெயரும் சுவரத்திற்கு உண்டு. ஆதியில் யாழின் நரம்புகளினின்றும் சுவரங்கள் பிறந்தமையால், ஆகுபெயராக ‘நரம்பு’ என்றனர். (பிங்கலம் ‡ 1434).

2. சுவரங்கள் ஏழு:

ச, ரி, க, ம, ப, த, நி, ச
கு, து, கை, உ, இ, வி, தா, கு
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் பெயர்கள் தனித் தமிழ்ப் பெயர்கள். பத்துப்பாட்டிலும் எட்டுத் தொகையிலும் இடம் பெறுவதால், அப் பெயர்களின் தொன்மை வழக்கு அறியலாம்.
குடமுதல் இடமுறையாக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை,இளி,விளரி,தாரம் என
விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே
-(சிலப். 17:13)
3. பன்னிரு சுவரஸ்தானம்:

ஏழு கோவைகளுள் து, கை, உ,வி, தா ‡ எனும் ஐந்தும் (ரி,க,ம,த,நி) ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வீடு பெற்றுப் பத்து வீடுகள் பெறுகின்றன. இப்பத்துடன் கு,இ, (ச.ப.) சேர்க்கப் (10+2) பன்னிரு ஸ்தானத்தைப் பண்டையோர் ‘பன்னிரு வீடு’ என்றும் ‘பன்னிரு நிலம்’ என்றும் கூறினர். இவ்வாறு ஐந்து கோவைகள் இரு வகை பெறுவதால் கோவைகள் (10+2) 12 வீடு, அல்லது 12 நிலம் பெறுகின்றன. (சிலப். 17:13 அடியார் உரை).
4. கோவை வகைகட்குப் பெயர்கள்: குறியீடு:
1. சட்சம் - சட்சம் - குரல் கு
2. ரிஷபம் -சுத்த ரிஷபம் - மென் துத்தம் மெ.து
-சதஸ்ருதி ரிஷபம் - வன் துத்தம் வ.து
3.காந்தாரம் -சாதாரண காந்தாரம் - மென் கைக்கிளை மெ.கை
-அந்தர காந்தாரம் - வன் கைக்கிளை வ.கை
4. மத்திமம் -சுத்த மத்திமம் -மெல்லுழை மெ.உ
-பிரதி மத்திமம் -வல்லுழை வ.உ.
5. பஞ்சமம் -பஞ்சமம் -இளி இ.
6. தைவதம் -சுத்த தைவதம் -மென் விளரி மெ.வி
-சதுசுருதி தைவதம் -வன் விளரி வ.வி
7. நிடாதம் -கைசகி நிடாதம் -மென் தாரம் மெ.தா
-காகலி நிடாதம் -வன் தாரம் வ.தா
குறிப்பு:
இன்று நாட்டில் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் குறியீடுகள் பெரிதும் வழக்கில் உள்ளமையாலும், கற்பனைக் கோவை பாடுவதற்குப் (கற்பனாஸ்வரம் பாடுவதற்குப்) பெரிதும் பயன்பட்டுவிட்டதாலும், இக்குறியீடுகளையே இப்போது பயன்படுத்தி வரலாம்.‘குறை ரிடபம்’, ‘நிறை ரிடபம்’ போன்று பெயரிடுதலும் ஏற்றவைகளே. வடமொழியில் கோமள ரிடபம், தீவிர ரிடபம், கோமள காந்தாரம் தீவிர காந்தாரம் என்று பெயரிட்டு வழங்குவது போன்றே ‡ தமிழிலும் குறை ரிடபம், நிறை ரிடபம் என்று பெயரிட்டும் வழங்கலாம்.
(அ) குறை, நிறை எனக் கோவைகள் அடைமொழி பெற்றமைக்குச் சான்று;
‘அகநிலைக் குரிய நரம்பின திரட்டி
நிறை குறை, கிழமை பெறுமன மொழிப’ ‡ (சிலப் 8:39. அடியா. உரை)
(ஆ) மேலும் ஏறிய கோவை, இறங்கிய கோவை என்னும் வழக்கும் பண்டைக் காலத்தில் இருந்தது; ஏறிய கோவை இறங்கிய கோவை எனவும் கூறி வந்தார்கள். மென்தாரம் வன்தாரம் எனக் கூறினார்கள்.
(இ) மேலும் ரி,க,ம,த,நி ‡ ஆகிய இடைநிலத்து வகையை அந்தரக் கோவைகள் ஐந்து என்றும் கூறினார்கள்.
இதுகாறும் விளக்கிய வற்றால் கோவை வகைகளை (அ) குறை கோவை, நிறை கோவை என்றும் (ஆ) ஏறிய கோவை, இறங்கிய கோவை என்றும் (இ) அந்தரக் கோவை, உயர்தரக் கோவை என்றும் வன் கோவை, மென் கோவை என்றும் கூறுவதுண்டு என அறியலாம்.
5. சுருதி: சுருதி எனும் வடசொல்லுக்கு இரு பொருள்; (1) ஒத்து (2) ஒலியின அலகு அளவு. சுது சுருதி சுவரம் என்பதை நாலு அலகுக் கோவை என்று கூறலாம். இதனைத் தமிழில் கேள்வி என்றும் சுட்டினார்கள். மேலும், நான்கு அலகினை முற்றிசை என்றும், மூவலகினைப் பற்றிசை என்றும் ஓரலகினைக் குற்றிசை என்றும் கூறினார்கள் (யாழ்நூல் 1974, ப.80). ஓரலகினைக குற்றிசை என்றமையால் ஈரலகினை நெட்டிசை என்பது போதரும். (எ‡டு: முற்றிசைத் துத்தம் = சதுசுருதி ரிடபம்)
6. ஆரோகணம்: கோவைகள் முதற் கோçவியனின்றும் தொடர் புற்று ஒரு குறித்த அளவில் உயர்ந்து செல்வதால் ‡ ஏறு நிரல் என்று கூறலாம். அதாவது உயர்ந்து செல்லும் ஒழுங்கான வரிசை என்று பொருத்தமாகப் பொருள் படுகிறது.
7. அவரோகணம்: மேற்கூறியவாறு அமைந்துள்ள கோவைகள் படிப்படியாய்க் குறைந்து இறங்கி வருவதால்‡ இறங்கு நிரல் எனலாம்.
8. ஸ்தாயி: குரல் முதல் ஏறிய தாரம் வரையில் உள்ள 12 கோவைகளின் வரிசைக் கூட்டு நிலையை ஒரு மண்டிலம் என்றனர். குரல் முதல் தாரம் வரை ஏழு கோவைக்குள் அவற்றின் வகைகளும் அடங்குகின்றமையால், 12 கோவைகள் ஆயின. மென்தார முதல் (நி 1) குரலிளி உறவு முறையில் தொடுத்துக் கொண்டு சென்றால் 12 கோவைக்கப் பின் 13 ஆவது கோவை முதலில் தொடங்கிய மென்தாரம் ஆகும். எனவே ஏழு கோவைகள் ஒரு வரிசையாகவும் அவற்றை அடுத்து 5 கோவைகள் வரிசையாகவும் 12 நரம்புகள் ஒலித்துச் செல்லுவதே மண்டிலம் எனப் பெயர் பெற்றது. ஒரு பெரும் பண்ணுக்கு ஏழு கோவைகள் தொடுப்பது வழக்கம்:
வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓர்ஏழ் தொடுத்த மண்டிலம் ஆகும்
(சிலப். ஆய்ச்.17 அடியா. உரை)
மண்டிலித்தல் என்பது மீண்டும் வருதல் எனப் பொருள் படுவது ‡ கு,து,கை,உ,இ,வி,தா என்னும் வரிசை மீண்டும் வந்த மண்டிலித்தலால் மண்டிலம் எனப் பெயர் பெற்றது. மண்டலம் என்பத வேறு பொருள் படுவது. மண்டல் ‡நெருங்கி அமைதல். மண்டலம் ‡நெருங்கி அமைந்தது எனப் பொருள் படுவது; மண்டலம் வேறு! மண்டிலம் வேறு)
9. ஸ்தாயி வகை: மண்டிலத்தை மூன்றாக வகுத்தனர்.
1. மத்திம ஸ்தாயி ‡ சமன் மண்டிலம்
2. மந்திர ஸ்தாயி‡மெலிவு மண்டிலம்­
3. தார ஸ்தாயி - வலிவு மண்டிலம்
10. ஸ்தாயி விரிவு: மீண்டும் ஏழு கோவைகளும் வரிசையில் வலிவ மண்டிலத்திற்கு மேலும் உயர்ந்து அமைவதை வலிவின் வலிவு மண்டிலம் என்றோ அதிவலிவு மண்டிலம் என்றோ குறித்தனர். மெலிவின் மண்டிலத்திற்கு அடுத்துக் கீழே மண்டிலம் தாழ்ந்து அமையும் போது ‡ அதை மெலிவின் மெலிவு மண்டிலம் என்றோ, அதி மெலிவு மண்டிலம் என்றோ குறித்தனர். பேரியாழிலே மெலிவு, சமன், வலிவு என்னும் மூன்று மண்டிலங்களும் நின்றன. சகோட யாழிலே 3 + 7 + 4 = 14 கோவை வீடுகள் முறையே மெலிவு, சமன், வலிவு என்னும் மண்டிலங்களில் அமைந்திருந்தன என்பார் விபுலாநந்த அடிகளார் (1974 யாழ் நூல். ப. 80).
11. தாரஸ்தாயு சட்சம் : சமன் மணடிலக் குரலின் அசைவு எண் 240 எனக் கொண்டால் , அடுத்த வலிவு மண்டிலக் குரலுக்கு ‡ அசைவு எண் 480 எனக் கண்டுபிடித்துள்ளனர். எனவே வலிவு மண்டிலக் குரல் (240+ 240 = 480) இரட்டித்து ஒலிக்கின்றதால் ‡ பண்டைத் தமிழர் ‡ இரட்டித்த குரல் என்றும் உயர் குரல் என்றும் கூறினார்கள். ஒத்த கிழமை உயர் குரல் மருதம் என்றார் அடியார்க்கு நல்லார் (சிலப். 8-39 அடியா. உரை).
12. பூர்வாங்கம் உத்தராங்கம்:
கு,து,கை,உ, (ச,ரி,க,ம) எனும் கோவைகளின் வரிசைப்பகுதியை முன்னர்ப் பாகம் (பூர்வாங்கம்) என்றனர். இ,வி,தா,க (ப,த,நி,ச்) என்னும் கோவைகளின் வரிசைப் பகுதியைப் பின்னர்ப் பாகம் (=உத்தராங்கம்) என்றனர். எட்டுக் கோவை வரிசையில் முன்னர் உள்ள 4 கோவைப் பாகத்தை முன்னர்ப் பாகம் என்றும் பின்னர் உள்ள 4 கோவைப் பாகத்தைப் பின்னர்ப் பாகம் என்றும் கூறியது மிக மிகப் பொருத்தம்,
தாரப் பாகமும் குரலின் பாகமும்
நேர்நடு வண்கிளை கொள்ள நிற்ப
முன்னர்ப் பாகமும் பின்னர்ப பாகமும்
விளரி குரலாகும் என்மனார் புலவர் ‡ சிலப்பதிகாரம்
முன்னர்ப பாகம் -ஸ்தாயியில் பூர்வாங்கம்; பின்னர் பாகம் ‡ ஸ்தாயியில் உத்தராங்கம் - என்றார் அறிவர் எசு.இராமநாதனார் (1596 சிலப். இசை நுணுக்கம். ப.38).

( இசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம் எழுதிய தமிழிசை வளம் என்னும் நூலிலிருந்து..)